திமுக இளைஞரணி 45ஆம் ஆண்டு: கோவை குறிச்சியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாட்டம்

கோவை குறிச்சியில் திமுக இளைஞரணியின் 45ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தளபதி முருகேசன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.


கோவை: கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி பகுதியில் திமுக இளைஞரணியின் 45ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திமுக இளைஞரணி 1980ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. 44 ஆண்டுகள் நிறைவடைந்து, 45வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நாளை முன்னிட்டு இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.



கோவை தெற்கு மாவட்ட திமுக கழக செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், திமுக கொடியேற்றம் நடைபெற்றது. மேலும், அங்கு கூடியிருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். இளைஞரணியின் 45 ஆண்டு கால வளர்ச்சியையும், சாதனைகளையும் நினைவுகூர்ந்து பேசினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...