மானியக் கடன் வழங்குவதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி: காவல் ஆய்வாளர் உள்ளிட்ட நால்வர் மீது புகார்

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிக்கு மானியக் கடன் வழங்குவதாகக் கூறி ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட நால்வர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் உள்ள தெற்கத்தியானூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், வள்ளலார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் என்ற பெயரில் விவசாயிகளுக்கான பயிர் உற்பத்தி மற்றும் விவசாயத் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கும் சங்கத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சுனில் குமார் மற்றும் சங்கர் என்ற இருவர் கோவிந்தராஜிடம், தங்களது GRANDEE ADLER PETROCHEMICALS PRIVATE LIMITED நிறுவனம் மூலம் அவரது நிறுவனத்திற்கு 20 கோடி வரை நிதி வழங்க உள்ளதாகக் கூறி, கோவையில் உள்ள தங்களது அலுவலகத்திற்கு வரும்படி அழைத்துள்ளனர்.

கோவிந்தராஜ் தன்னுடன் கந்தசாமி மற்றும் தினேஷ்குமார் ஆகியோரை அழைத்துக் கொண்டு கோவைக்கு வந்து சுனில் குமார் மற்றும் சங்கரை சந்தித்துள்ளார். அவர்கள் அமைச்சர் முத்துசாமியுடன் இருக்கும் புகைப்படத்தைக் காண்பித்து, அரசின் உதவியுடன் பல்வேறு சங்கங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கி வருவதாகக் கூறியுள்ளனர்.

கடன் பெற முன் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்று கூறியதை நம்பி, கோவிந்தராஜ் வங்கி கணக்கில் இருந்து 50 லட்சமும் ரொக்கமாக 30 லட்சமும் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்டவர்கள், ரொக்கமாக 10 கோடி, காசோலையாக 10 கோடி என மொத்தம் 20 கோடி ரூபாயை நேரில் வந்து பெற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளனர்.

கடந்த மே 13 ஆம் தேதி, கோவிந்தராஜ் தரப்பினர் ஊட்டி, கூடலூர் பஸ் நிலையத்திற்குச் சென்றபோது, மணி என்பவர் காரில் வந்து 10 கோடி ரூபாய் பணத்தையும் 10 கோடி ரூபாய்க்கான காசோலையையும் காண்பித்து, அவர்களை காரில் ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் வழியாக சேலம் நோக்கிச் சென்றுள்ளார். அப்போது குன்னூர் காவல் ஆய்வாளர் சதீஸ் மற்றும் காவலர் சிவக்குமார் ஆகியோர் கோவிந்தராஜ் தரப்பினரை குன்னூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தில், ஆய்வாளர் சதீஸ் பணம் குறித்து கேள்வி எழுப்பியபோது, கோவிந்தராஜ் மானியத்துடன் கூடிய கடன் பெறுவதாகக் கூறியுள்ளார். பின்னர் சுனில் குமார் மற்றும் சங்கர் வந்து ஆய்வாளருடன் தனியாகப் பேசிய பிறகு, கோவிந்தராஜ் தரப்பினரை வழக்குப் போடுவதாக மிரட்டி வெளியேற்றியுள்ளனர்.

இதனையடுத்து, தாம் மோசடி செய்யப்பட்டிருப்பதை அறிந்த கோவிந்தராஜ் தரப்பினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சுனில் குமார், சங்கர், குன்னூர் காவல் ஆய்வாளர் சதீஸ் மற்றும் காவலர் சிவக்குமார் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தும், போலி வழக்குகளில் கைது செய்து விடுவதாக மிரட்டியும், 80 லட்சத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...