கோவையில் மன ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு மாரத்தான் - 1200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் இந்திய மன நல மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை மற்றும் கொங்குநாடு மனநல அறக்கட்டளை சார்பில் மனதிற்கான ஓட்டம் என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதில் 1200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


கோவை: இந்திய மன நல மருத்துவ சங்கம் தமிழ்நாடு கிளை மற்றும் கொங்குநாடு மனநல அறக்கட்டளை சார்பில் "மனதிற்கான ஓட்டம்" என்ற பெயரில் மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் கோவையில் நடைபெற்றது.

பொது மக்களிடம் மன ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த மரத்தான் தொடர் ஓட்டம் கோவை நேரு அரங்கில் தொடங்கியது.



3, 5 மற்றும் 10 கிலோமீட்டர் தூரங்களில் ஓட்டங்கள் நடைபெற்றன. பொது மக்களிடம் மனஅழுத்தம் மற்றும் மாணவர்களிடம் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் இந்த மாரத்தான் விழிப்புணர்வு அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.

ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 1200க்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தானில் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காவல் துறையின் முன்னாள் டிஜிபி Dr. ரவி IPS கலந்து கொண்டார். மேலும், தமிழ்நாடு மனநல சங்கத்தின் தலைவர் Dr. பன்னீர்செல்வம், இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளையின் தலைவர் Dr. பிரியா கார்த்திக்பிரபு, கொங்குநாடு மனநல அறக்கட்டளையின் தலைவர் Dr. பிரதீப் மற்றும் உறுப்பினர்களான Dr. ஸ்ரீனிவாசன், Dr. வெங்கடேஷ்குமார், Dr. மணி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை மற்றும் கேடயங்களை வழங்கினர்.

இந்திய மனநல மருத்துவ சங்கம், தமிழ்நாடு சேப்டரின் 39வது மாநில மாநாடு வருகின்ற ஜூலை 27 மற்றும் 28 தேதிகளில் கோவை ஜென்னிஸ் கிளப் அரங்கில் நடைபெற உள்ளது. "மனநல மருத்துவ துறையின் புதுமைகள்" என்ற தலைப்பில் கொங்குநாடு மனநல மருத்துவ சங்கம் இந்த மாநாட்டை நடத்த உள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் இதர பகுதிகளில் இருந்து சுமார் 800 மனநல மருத்துவர்கள் மற்றும் மனநல முதுகலை பட்டதாரி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைய உள்ளனர்.

இந்த மாநாட்டில் இந்தியாவின் முன்னணி மருத்துவமனைகளான AIIMS, NIMHANS, JIPMER ஆகியவற்றின் மனநல மருத்துவர்களின் உரையாற்றல்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற உள்ளன. மேலும், மனநல மருத்துவர்கள் மற்றும் முதுகலை மாணவர்களின் சுமார் 200 ஆராய்ச்சி கட்டுரைகள் இதில் அறிமுகம் செய்யப்படும். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் மனநல மருத்துவர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும், புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் முடியும். இந்த புதுமைகள் மனநோயாளிகளின் சிகிச்சையில் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாகவே இந்த விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...