கோவை பெரியகடை வீதியில் வாடிக்கையாளர்களை வற்புறுத்தும் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

கோவை பெரியகடை வீதியில் வாடிக்கையாளர்களை வற்புறுத்தும் கடை ஊழியர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் புகார் அளிக்க தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.


கோவை: கோவை பெரியகடை வீதியில் பெண்களிடம் அத்துமீறியும், பொதுமக்களை வற்புறுத்தி பொருட்கள் வாங்க கடைக்குள் இழுத்து செல்லும் கடை ஊழியர்கள் குறித்த சிசிடிவி காட்சி ஆதாரத்துடன் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இத்தகைய செயல்களில் ஈடுபடும் கடை ஊழியர்கள் மற்றும் உடந்தையாக இருக்கும் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் கடை வீதிகளில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.

கோவை மாநகரின் முக்கிய வணிக மையமான பெரியகடை வீதியில் அதிகமான துணிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இப்பகுதியில் வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தி கடைக்குள் அழைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஜூன் மாதம் இப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரியும் இளைஞர், அவ்வழியாக நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து கட்டாயப்படுத்தி கடைக்கு அழைத்த சம்பவம் சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அந்த இளைஞரை தாக்கியுள்ளார். பதிலுக்கு அந்த இளைஞரும் அவரை தாக்கியுள்ளார்.

இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பொதுமக்கள் பலரும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து, வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்யும் வகையில் அழைப்பதற்கு கூலி ஆட்களை நியமிப்பவர்கள் மீது (BNS ACT 292) பிரிவின் படி வழக்குப்பதிவு செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இத்தகைய நபர்களை வேலைக்கு அமர்த்தும் கடை உரிமையாளர்கள் உடந்தை குற்றவாளியாக சேர்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என B-1 கடைவீதி காவல் நிலையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் புகார் தெரிவிக்க பின்வரும் தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளனர்:



காவல் நிலையம் தொலைபேசி எண்: 94981 01141, 0422-230 2746

காவல் கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்: 94981 81213

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...