அரசியல் சுத்தம் பாஜகவில் இருந்து தொடங்க வேண்டும்: அண்ணாமலை

கோவை துடியலூரில் நடைபெற்ற தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். அரசியல் சுத்தம், லஞ்ச ஒழிப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.


Coimbatore: கோவை துடியலூர் பகுதியில் நடைபெற்ற தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் அமைப்பின் முப்பெரும் விழாவில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இந்த நிகழ்வில் அமைப்பு சார்பில் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய அண்ணாமலை, ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் சார்பில் வழங்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகள் இல்லை எனவும், 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிதி அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிப்பதாக உறுதியளித்தார்.



அரசியல் சுத்தம் என்பது பாஜகவில் இருந்து தொடங்க வேண்டும் என முழு முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார். மேலும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பயன்கள் அனைத்தும் ஹையர் கூட்ஸ் தொழிலாளர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்கள் வைக்கும் இலக்கு பெரிதாக இருக்க வேண்டும் என்றும், அதுதான் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார். லஞ்சம் கொடுப்பதை எதிர்க்க வேண்டும் என்றும், இளைஞர்கள் லஞ்சத்தை எதிர்க்கவில்லை என்றால் நாட்டில் லஞ்சம் எனும் பேயை விரட்ட முடியாது என்றும் தெரிவித்தார்.



மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் போன்றோரை உதாரணமாக குறிப்பிட்ட அண்ணாமலை, தனி மனிதனாக இருந்து எவ்வளவு பெரிய காரியத்தையும் செய்யலாம் என்பதை வலியுறுத்தினார். லஞ்சத்தை அறவே தவிர்ப்போம், அதன் மூலம் அந்த பிரச்சினை வந்தாலும் அதை எதிர்த்து நிற்போம் என்று அவர் முடித்துக் கொண்டார்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...