உடுமலை அருகே உயர் மின் கோபுரம் சரிந்து விழுந்து 4 பேர் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் வேடப்பட்டியில் உயர் மின் கோபுரம் சரிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் வேடப்பட்டி பகுதியில் இன்று அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்தது. பொள்ளாச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலை அருகே நெய்வேலியில் இருந்து உடுமலைக்கு மின்சாரம் கொண்டு வரும் புதிய உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக உயர் மின் கோபுரம் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் கோபுரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த செல்வமாணிக்கம், பெருமாள், தங்கராஜ், சேதுபதி ஆகிய நான்கு தொழிலாளர்கள் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.



உடனடியாக அருகில் இருந்த விவசாயிகள் காயமடைந்தவர்களை மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் செய்யப்படாமல், இரவு நேரத்தில் மட்டுமே நடைபெற்று வந்ததாகத் தெரிவித்தனர். மேலும், கோபுரத்தின் கம்பிகள் தரம் குறைவாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...