ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் அரசுப் பள்ளியில் புதிய கழிப்பறை கட்டிடம் திறப்பு


ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் ஷேன் டியகோ டௌவுன்டவுன் பிரேக்பாஸ்ட், யுஎஸ்ஏ சார்பில் சுவட்ச் பாரத் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவை, அசோகபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளயில் கழிப்பறை கட்டப்பட்டு அதனை கோவை ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் பிரகாஷ் சந்திரன் திறந்து வைத்தார்.

இது குறித்து ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் செயலாளர் ராம்குமார் கூறுகையில்; உலகளாவிய மானியத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கு கழிப்பறை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு ரோட்டரி இன்டெர்நேஷ்னல் தலைமையகம் மூலம் 50 சதவீதம் நிதி வழங்கப்பட்டது. இதுவரை ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் 10 அரசுப் பள்ளிகளுக்கு 65 லட்சம் செலவில் கழிப்பறை வசதி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கழிப்பறை வசதிக்கு முழுமையாக தண்ணீர் வசதி போன்றவை செய்து கொடுக்கப்பட்டுள்ளது.



இதனை பராமரிப்பு மற்றும் மேற்பார்வையிட ஒவ்வொரு மாதமும் ரோட்டரி குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்படவுள்ளது. அதன்பிறகு பி.எஸ்.ஜி மருத்துவமனையின் மருத்துவர்கள் இந்த பள்ளி கூடங்களுக்கும் சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுக்க முடுவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற திட்டங்களுக்கு ரோட்டரி இன்டெர்நேஷ்னல் தலைமையகம் உதவி வருகிறது. அவர்களுக்கு இந்த திட்டத்தை பற்றிய தகவல் 6 மாதத்திற்கு ஒருமுறை ரிப்போர்ட் அனுப்பும் வகையில் 5 ஆண்டுகளுக்கு இந்த கழிப்பறை வசதிகள் பராமரிக்கப்பட்டு வரும். இதுபோன்ற திட்டங்களுக்கு பள்ளிகளில் இருந்தும் மிகுந்த ஆதரவு கிடைக்கிறது என்றார்.



இதில், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் தலைவர் குரூப்தீப் சிங், உதவி ஆளுநர் மாரப்பன், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...