கோவையில் மூதாட்டி தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

கோவையில் 70 வயது மூதாட்டி வசந்தா, நகை மோசடி வழக்கில் போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் கருணை கொலை அல்லது தற்கொலைக்கு அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 70 வயதான மூதாட்டி வசந்தா என்பவர் தன்னை கருணை கொலை அல்லது தற்கொலை செய்ய அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோயம்புத்தூர் கே.ஜி. போஸ் நகரைச் சேர்ந்த வசந்தா, தனது மனுவில் கூறியிருப்பதாவது: "விமலா கீர்த்தி உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து என்னிடமிருந்து 14 பவுன் நகை வாங்கி மோசடி செய்தனர். இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், முறையான விசாரணை நடத்தாமல் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முயற்சி நடக்கிறது."

"குற்றவாளிகளுக்கு சாதகமாக குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக உள்ள காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "மாநகர காவல் ஆணையர் சிங்காநல்லூர் காவல் நிலைய அதிகாரிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனி எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே, என்னை கருணை கொலை அல்லது தற்கொலை செய்ய அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும்," என்று தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த சம்பவம் கோவை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள் இது போன்ற சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும், முதியோர்களுக்கு உரிய பாதுகாப்பும் நீதியும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...