வால்பாறையில் மின் ஊழியர் மின்சாரம் பாய்ந்து பரிதாப உயிரிழப்பு

வால்பாறையில் மின் கம்பத்தில் பணியாற்றிய போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் கருப்பசாமி உயிரிழந்தார். சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: வால்பாறையை அடுத்த வாகமலை எஸ்டேட்டைச் சேர்ந்த கருப்பசாமி (அ) கண்ணன் (45) என்பவர் வால்பாறை மின்வாரியத்தில் நிரந்தரப் பணியாளராக பணிபுரிந்து வந்தார்.

ஜூலை 22 அன்று, புதிய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை சரிசெய்ய, மின்மாற்றியிலிருந்து மின் இணைப்பைத் துண்டிக்கச் சென்றார் கருப்பசாமி. பணி முடிந்த பின்னர், மின்மாற்றியிலிருந்து மின் கம்பங்களுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க கம்பியை இழுத்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.

இதில் கருப்பசாமி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர் பரிசோதனையில் கருப்பசாமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து வால்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின் ஊழியர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மின்வாரியம் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...