உடுமலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

உடுமலையில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் மின் கட்டண உயர்வு மற்றும் நியாயவிலை கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு குறித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கப்படாததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். தாலிக்கு தங்கம், இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்கள் தமிழகத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சாஸ்திரி சீனிவாசன், நகரச் செயலாளர் ஹக்கீம், ஒன்றிய செயலாளர்கள் அன்பர் ராஜன், பிரனேஷ், முருகேசன், சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை மற்றும் பல்லடம் பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...