மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மின் கட்டண உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரிக்கன் விளக்கு ஏந்தி நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.


Coimbatore: கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே மின் கட்டண உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மின் கட்டண உயர்வு, ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் விரோத செயல்களை மேற்கொள்ளும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசை கண்டித்து அரிக்கன் விளக்கு ஏந்தி நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண்குமார், மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் AK. செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் OK. சின்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாவட்ட, பகுதி, ஒன்றிய, வட்ட, ஊராட்சி கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கட்சியின் செயல் வீரர்கள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...