கோவை பேருந்தில் பயணி மறந்துவிட்ட ரூ.20,000-ஐ திருப்பி அளித்த ஓட்டுநர், நடத்துனர்

கோவையில் சோமனூர்-காந்திபுரம் வழித்தடப் பேருந்தில் பயணி மறந்துவிட்ட ரூ.20,000-ஐ உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநர் K.விஜயகுமார், நடத்துனர் V.A.முருகன் ஆகியோரை மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ் பாராட்டினார்.


கோவை: கோவையில் அரசு பேருந்தில் பயணி மறந்துவிட்ட ரூ.20,000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, கோவையில் TN 38 N 3524 எண் கொண்ட 20A வழித்தட பேருந்தில் சோமனூர் முதல் காந்திபுரம் வரை ஓட்டுநர் K.விஜயகுமார் மற்றும் நடத்துனர் V.A.முருகன் ஆகியோர் பணியாற்றினர். இந்த பேருந்தில் பயணித்த ஒரு பெண் பயணி தனது உடைமைகளை மறந்துவிட்டு சென்றுள்ளார்.

இதனை கவனித்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் சேர்ந்து, அந்த பெண் பயணியை கண்டுபிடித்து, அவரது உடைமைகளை திருப்பி ஒப்படைத்துள்ளனர். அதில் ரூ.20,000 பணமும், பயணி வைத்திருந்த அனைத்து பொருட்களும் இருந்தன. இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த பெண் பயணி, ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் நேர்மைக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கும், அதன் ஊழியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 23) கோவை அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ், நேர்மையாக நடந்துகொண்ட ஓட்டுநர் K.விஜயகுமார் மற்றும் நடத்துனர் V.A.முருகன் ஆகியோரை அழைத்து பாராட்டினார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...