கோவை பேருந்தில் பயணி மறந்துவிட்ட ரூ.20,000-ஐ திருப்பி அளித்த ஓட்டுநர், நடத்துனர்

கோவையில் சோமனூர்-காந்திபுரம் வழித்தடப் பேருந்தில் பயணி மறந்துவிட்ட ரூ.20,000-ஐ உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநர் K.விஜயகுமார், நடத்துனர் V.A.முருகன் ஆகியோரை மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ் பாராட்டினார்.


கோவை: கோவையில் அரசு பேருந்தில் பயணி மறந்துவிட்ட ரூ.20,000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, கோவையில் TN 38 N 3524 எண் கொண்ட 20A வழித்தட பேருந்தில் சோமனூர் முதல் காந்திபுரம் வரை ஓட்டுநர் K.விஜயகுமார் மற்றும் நடத்துனர் V.A.முருகன் ஆகியோர் பணியாற்றினர். இந்த பேருந்தில் பயணித்த ஒரு பெண் பயணி தனது உடைமைகளை மறந்துவிட்டு சென்றுள்ளார்.

இதனை கவனித்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் சேர்ந்து, அந்த பெண் பயணியை கண்டுபிடித்து, அவரது உடைமைகளை திருப்பி ஒப்படைத்துள்ளனர். அதில் ரூ.20,000 பணமும், பயணி வைத்திருந்த அனைத்து பொருட்களும் இருந்தன. இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த பெண் பயணி, ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் நேர்மைக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கும், அதன் ஊழியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 23) கோவை அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ், நேர்மையாக நடந்துகொண்ட ஓட்டுநர் K.விஜயகுமார் மற்றும் நடத்துனர் V.A.முருகன் ஆகியோரை அழைத்து பாராட்டினார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...