ஏழை, நடுத்தர மக்களுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன் - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பாராட்டு

கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் 2024-25 மத்திய பட்ஜெட்டை வரவேற்றுள்ளார். ஏழை, நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை பாராட்டியுள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததன் மூலம் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் இந்தியா உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக உயர்ந்துள்ளதாகவும், 2047-ல் உலகின் முதல் பொருளாதார நாடாக இந்தியாவை உயர்த்த இலக்கு நிர்ணயித்து பிரதமர் மோடி பணியாற்றி வருவதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்த பட்ஜெட்டில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி, வேளாண் துறைக்கு ரூ. 1.50 லட்சம் கோடி ஒதுக்கீடு, உயர் கல்விக்கு ரூ.10 லட்சம் கல்விக்கடன், புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு அரசு சார்பில் ஒரு மாத சம்பளம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராட்டியுள்ளார்.

மேலும், புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துகளுக்கு முற்றிலும் சுங்கவரி விலக்கு, தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி குறைப்பு, வருமான வரிச்சலுகைகள் போன்ற முக்கிய அம்சங்களையும் வானதி சீனிவாசன் எடுத்துரைத்துள்ளார்.

இந்த பட்ஜெட் ஏழை, நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், வேலைவாய்ப்புக்கான புதிய திட்டங்கள் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் வானதி சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...