ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு

கோவை மாவட்டம் ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான இந்த நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் சேர்க்கை நடைபெறுகிறது.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டம் ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இந்த பழங்குடியினருக்கான தொழிற்பயிற்சி நிலையத்தில் எலெக்ட்ரீசியன், ஃபிட்டர், ஒயர்மேன், வெல்டர் ஆகிய பிரிவுகளில் இருபாலருக்கும் நேரடிச் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சேர விரும்பும் மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்று சேர்க்கை பெறலாம்.


சேரும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். அவற்றில் இலவச பேருந்து அட்டை, வருகையின் அடிப்படையில் மாதம் ரூ.750 கல்வி உதவித்தொகை, இலவச பாடப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், வரைபடக் கருவிகள், மிதிவண்டி ஆகியவை அடங்கும்.


மேலும், பயிற்சி முடித்த அனைவருக்கும் வளாக நேர்காணல் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார். விடுதியின் காலியிடங்களைப் பொறுத்து உணவு மற்றும் தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 94990-55694, 99945-55884, 94430-15904, 99421-28234, 95002-49705, 98657-96373 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...