சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மேலும் சரிவு: சவரனுக்கு 480 ரூபாய் குறைந்தது

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று ஒரு சவரன் தங்கம் 51,920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இரண்டு நாட்களில் 2,680 ரூபாய் குறைந்துள்ளது.


Coimbatore: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 51 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது.

22 கேரட் தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் சரிந்து 6 ஆயிரத்து 490 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2,680 ரூபாய் வரை சரிந்துள்ளது.

தங்கம் விலை குறைந்ததால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக, ஒரு சவரன் தங்கம் 52 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளதால், தங்கம் வாங்க திட்டமிட்டுள்ள பெண்கள் உற்சாகமடைந்துள்ளனர். தற்போதைய விலை குறைவை பயன்படுத்தி தங்கம் வாங்குவதற்கான வாய்ப்பாக பலரும் கருதுகின்றனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...