கோவை பறவைகள் மறுவாழ்வு மையத்தில் நவீன எக்ஸ்ரே இயந்திரம் திறப்பு

கோவை வனக் கல்லூரி வளாகத்தில் உள்ள பறவைகள் மறுவாழ்வு மையத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான நவீன எக்ஸ்ரே இயந்திரம் திறக்கப்பட்டது. இது பறவைகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க உதவும்.


Coimbatore: கோவை வனக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் பறவைகள் மறுவாழ்வு மையத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான நவீன எக்ஸ்ரே இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டை கோவை மண்டல வனப் பாதுகாவலர் எஸ்.ராமசுப்பிரமணியம் ஜூலை 24 அன்று தொடங்கி வைத்தார்.

பறவைகள் மறுவாழ்வு மைய பொறுப்பாளர்கள் வின்னி மற்றும் ஜோசப் கூறுகையில், இந்த அமைப்பு மூலம் இதுவரை சுமார் 110 வகையான 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். விபத்தில் காயமடையும் பறவைகள், நோய்வாய்ப்பட்ட பறவைகள், கூட்டிலிருந்து தவறி விழும் குஞ்சுகள் ஆகியவற்றை மீட்டு சிகிச்சையளித்து மீண்டும் விடுவிக்கப்படுவதாக அவர்கள் கூறினர்.

தற்போது இம்மையத்தில் மயில், கழுகு, கிளி, குயில், காகம், ஆந்தை, கொக்கு, புல்புல் உள்ளிட்ட பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள எக்ஸ்ரே இயந்திரம் மூலம் காயமடைந்த பறவைகளுக்கு எக்ஸ்ரே செய்து தேவையான சிகிச்சை அளிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இம்மையத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோவை வனக் கல்லூரி வளாகத்திற்குள் உள்ள இம்மையம் காலை 9 முதல் மாலை 6 மணி வரை இயங்குகிறது. காயமடைந்த மற்றும் மறுவாழ்வு தேவைப்படும் பறவைகள் குறித்த விவரங்களை மாவட்ட வனத் துறையினருக்கு 1800 425 45456 என்ற உதவி எண்ணிலும், பறவைகள் மறுவாழ்வு மையத்தை 96260 11011 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள எக்ஸ்ரே இயந்திரத்தில் காயமடைந்த ஆண் மயிலுக்கு புதன்கிழமை எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவர் குமார்பால் தாகா, உதவி ஆளுநர் பிரேம்குமார், வனக் கல்லூரி ஆராய்ச்சியாளர் நாகராஜன், வனக் கால்நடை மருத்துவர் ஏ.சுகுமார், ஏஆர்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.வருண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...