ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை கைவிட கோரி அதிமுக உறுப்பினர்கள் தர்ணா

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை கைவிட கோரி தர்ணா போராட்டம் நடத்தினர். கட்டண உயர்வு மற்றும் மக்களை ஏமாற்றும் திட்டம் என குற்றம்சாட்டினர்.


Coimbatore: கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், ரமேஷ், சர்மிளா ஆகியோர் ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை கைவிட கோரி பதாகைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பேசிய அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், "திராவிட மாடல் அரசு இலவச வீடு திட்டம் போல ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை விளம்பரப்படுத்தி மக்களை ஏமாற்றியுள்ளது" என்று குற்றம்சாட்டினார். மேலும், இத்திட்டத்தில் ஒரு சதுர அடிக்கான அனுமதி கட்டணம் ₹44லிருந்து ₹88 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இது ஏழை எளிய மக்களின் வீடு கட்டும் கனவை சிதைக்கும் செயல் என்றும் கூறினார்.



அதிமுக உறுப்பினர் பிரபாகரன் மேலும் தொடர்ந்து, "இந்த ஆன்லைன் கட்டிட அனுமதி திட்டத்தை அரசு திரும்பப் பெறாவிட்டால், அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த தர்ணா போராட்டம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...