கோவை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் சர்ச்சை: 333 தீர்மானங்கள் விவாதமின்றி நிறைவேற்றம்

கோவை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 333 தீர்மானங்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டதால் அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து திமுக உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் இன்று நடைபெற்ற மாமன்ற சாதாரண கூட்டத்தில் சர்ச்சை ஏற்பட்டது. அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், துணை மேயர் தன்னிச்சையாக முடிவெடுத்து 333 தீர்மானங்களை கொடுத்துள்ளதாகவும், இந்த தீர்மானங்களுக்காக பல கோடி ரூபாய் கைமாறியுள்ளதாகவும், ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

பிரபாகரன் மேலும் கூறுகையில், "கடந்த வாரம் 100 தீர்மானங்கள் கொடுத்தார்கள். தற்போது 250 தீர்மானங்கள் கொடுத்துள்ளார்கள். ஒரே நாளில் எப்படி அனைத்தையும் படிக்க முடியும்? திமுக மாமன்ற உறுப்பினர்கள் யாராவது இந்த தீர்மானங்களை படித்திருக்கிறார்களா என்று கேளுங்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.



மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரபாகரன், ஒரே நேரத்தில் 333 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாகவும் தீர்மானத்தை படிக்க கூட நேரம் ஒதுக்குவதில்லை எனவும் கூறினார். இதனால் திமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதே வேளையில், வாக்குவாதம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே 333 தீர்மானங்களும் எவ்வித விவாதங்களும் இன்றி நிறைவேற்றப்பட்டதாக துணை மேயர் வெற்றிச்செல்வன் அறிவித்தார். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

பின்னர், மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் குறுக்கிட்டு, தற்போதைக்கு அமைதியான முறையில் மன்ற கூட்டம் நடைபெற உதவுமாறும், இது குறித்து பின்னர் விவாதிக்கலாம் எனவும் கேட்டுக் கொண்டதை அடுத்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் சமாதானம் அடைந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பள்ளியில் போதை எதிர்ப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள பீளமேடு தொடக்கப்பள்ளியில் போதைப்பொருள் தீமைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்...

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...