கோவையில் வீட்டுக்குள் திருட வந்து மதுபோதையில் தூங்கிய நபர் கைது

கோவை காட்டூரில் வீட்டுக்குள் திருட நுழைந்த நபர் மதுபோதையில் தூங்கிவிட்டதால் கைது செய்யப்பட்டார். வீட்டுக்கு திரும்பிய உரிமையாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.


Coimbatore: கோவை காட்டூர் ராம்நகரை சேர்ந்த வியாபாரி ராஜன் (53) தனது மனைவியை பார்க்க சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது, வீட்டின் நடுவில் ஒருவர் மதுபோதையில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தார்.


அதிர்ச்சியடைந்த ராஜன், உடனடியாக காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்நபரை கைது செய்தனர். விசாரணையில், அவர் கருமத்தம்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (48) என்பதும், வீட்டில் திருட வந்தபோது படுத்து உறங்கிவிட்டதாகவும் தெரியவந்தது.


போலீசார் கூறுகையில், "கைதான பாலசுப்பிரமணியனுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. அவர் கிடைத்த வேலைக்கு சென்றுவிட்டு மது அருந்தி பல இடங்களுக்கு சுற்றி வந்துள்ளார். ராஜன் வீட்டின் கதவு பூட்டி இருந்ததை பார்த்து, பூட்டை உடைத்து கொள்ளையடிக்கலாம் என்று நினைத்து உள்ளே நுழைந்துள்ளார். ஆனால் வீட்டுக்குள் இருட்டாக இருந்ததால், திடீரென்று தடுமாறி கீழே விழுந்துள்ளார். மதுபோதையில் இருந்ததால் எழுந்திரிக்க முடியாமல் அப்படியே தூங்கிவிட்டார். அன்று இரவே ராஜன் வந்ததால், திருட வந்த நபர் பிடிபட்டார்" என்று தெரிவித்தனர்.


இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இச்சம்பவம் வலியுறுத்துகிறது.

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...