துடியலூர் அருகே வீட்டில் 10 பவுன் நகை மற்றும் ரூ.25,000 பணம் கொள்ளை

கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை, ரூ.25,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டது. குடும்பம் திருப்பதி சென்றிருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ரூ.25,000 பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து கிடைத்த விவரங்களின்படி, துடியலூர் அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பக்தவச்சலம் (70). இவர், கடந்த ஜூலை 23ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பதி சென்றார். பின்னர் அங்கிருந்து ஜூலை 25ஆம் தேதி கோவை திரும்பினர்.

வீட்டிற்கு திரும்பிய பக்தவச்சலம், கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, உடைமைகள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த தங்க வளையல், செயின், பிரேஸ்லெட் உள்ளிட்ட 10 பவுன் நகை மற்றும் ரூ.25,000 மதிப்பிலான வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இச்சம்பவம் குறித்து பக்தவச்சலம் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...