தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நானோபோர் வரிசைப்படுத்துதல் பயிலரங்கம் நடைபெற்றது

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நானோபோர் வரிசைப்படுத்துதல் குறித்த ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் கலந்துகொண்டு வேளாண் ஆராய்ச்சியில் புதிய தொழில்நுட்பங்களின் பங்களிப்பு குறித்து விவாதித்தனர்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்த் தொழில்நுட்பவியல் மையம் இன்று (26.07.2024) நானோபோர் வரிசைப்படுத்துதல் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடத்தியது. இந்த பயிலரங்கத்தில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

உயிர்த்தொழில்நுட்பவியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் ஈ.கோகிலாதேவி வரவேற்புரை வழங்கினார். கார்டிவா அக்ரி நிறுவனத்தின் விதை ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத் துறையின் தலைவர் முனைவர் ராமன் பாபு மற்றும் Zelle Biotechnology Pvt Ltd -ன் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குனர் முனைவர் தே.சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார். அவர் வேளாண் ஆராய்ச்சியில் புதிய தொழில்நுட்பங்களின் பங்கு மற்றும் அவற்றின் மூலம் வேளாண் மாணவர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது குறித்தும் விவாதித்தார்.

தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்த்தொழில்நுட்பவியல் மையத்தின் இயக்குனர் முனைவர் ந.செந்தில் தனது அறிமுக உரையில், மூலக்கூறு வரிசைப்படுத்துதலின் முக்கியத்துவத்தையும், பொது மற்றும் தனியார் துறையின் கூட்டு முயற்சியின் மூலம் ஆராய்ச்சி முடிவுகளை மேம்படுத்துவது குறித்தும் எடுத்துரைத்தார்.

முனைவர் ராமன் பாபு, தெற்காசியா, கார்டேவா அக்ரிசயின்ஸ், ஹைதராபாத் மற்றும் பயிற்சிப் பேராசிரியர் (தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்), தற்போதைய போக்குகள், தாவர வளர்ப்பில் மேம்பாடுகள் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார். அவர் தற்போதைய ஆராய்ச்சியில் உள்ள ஐந்து வெவ்வேறு முன்னுதாரண மாற்றங்களைப் பற்றியும் குறிப்பிட்டார்.

குறுகிய காலத்தில் பெற்றோர் பொருள் மேம்பாடு, மரபணு தேர்வு, டிஜிட்டல் கருவிகள் மூலம் பினோடைப்பிங், டிஜிட்டல் விவசாயம், ஜீனோம் எடிட்டிங், ஸ்டெம் செல் ஆராய்ச்சி மற்றும் திசு பொறியியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிகளை மேம்படுத்தலாம் என்று அவர் கூறினார். மேலும், மாணவர்கள் சிறந்த வேலை வாய்ப்புகளுக்காக இத்துறைகளில் சிறப்புத் திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தொழில்துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டாக்டர். திவ்யா ஷெட்டி, Zelle Biotechnology Pvt Ltd-ன் மூத்த கள பயன்பாட்டு விஞ்ஞானி, ஆக்ஸ்போர்டு நானோபூர் மற்றும் இல்லுமினா வரிசைமுறை மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும், டாக்டர் ரமேஷ் வைத்தியநாதன், ட்விஸ்ட் பயோசயின்ஸின் வணிக வளர்ச்சி மேலாளர், செயற்கை உயிரியலின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும் விரிவான உரைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியின் முடிவில், தாவர உயிரித் தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் எம்.சுதா நன்றியுரை வழங்கினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...