கோவை: தங்கையை தவறாக பேசிய நண்பரை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது

கோவை சூலூர் அருகே மது போதையில் தங்கையை தவறாக பேசிய நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் ஓடக்கல்பாளையத்தில் நடந்தது.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஓடக்கல்பாளையத்தில் மது போதையில் தங்கையை தவறாக பேசிய நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வெளியே காட்டுப்பகுதியில் ஆண் சடலம் ஒன்று தலையில் காயங்களுடன் கிடப்பதாக சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி மாரப்பனின் மகன் பரமசிவம் (28) என்பது தெரியவந்தது. கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்த பரமசிவம் சில மாதங்களாக பணிக்குச் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி, இரவு நேரத்தில் காட்டுப் பகுதியில் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக தெரியவந்தது.

போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளியைத் தேடி வந்த நிலையில், ஓடக்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த வரதராஜன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், பரமசிவம் குடிபோதையில் தன் தங்கையை தவறாக பேசியதால் கல்லால் அடித்துக் கொன்றதாக வரதராஜன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவத்தன்று பரமசிவம், வரதராஜன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் மது அருந்தச் சென்றனர். பார்த்திபன் மட்டும் வீடு திரும்பிய நிலையில், பரமசிவமும் வரதராஜனும் தொடர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். போதை தலைக்கேறிய நிலையில், வரதராஜனின் தங்கை குறித்து பரமசிவம் தவறாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வரதராஜன் பரமசிவத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட, வரதராஜன் அருகில் இருந்த கல்லை எடுத்து பரமசிவத்தின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பரமசிவம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்ற வரதராஜன் கடந்த சில தினங்களாக வதம்பச்சேரி சுற்று வட்டார பகுதிகளில் சுற்றித்திரிந்து வந்த நிலையில் சுல்தான்பேட்டை போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

தற்போது வரதராஜனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...