இஸ்லாம் குறித்து அறிய கிருஸ்தவ பாதிரியார்கள் மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாசலுக்கு வருகை

கோவையில் உள்ள நல்லாயன் குருகுலப் பள்ளியில் பயின்ற கிருஸ்தவ பாதிரியார்கள் சர்வ சமய நம்பிக்கைகளை அறிந்துகொள்ள மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாசலுக்கு வருகை தந்தனர். இஸ்லாம் குறித்து கேள்விகள் கேட்டு தெளிவடைந்தனர்.


கோவை: கோவை நல்லாயன் குருகுலப் பள்ளியில் பயின்று நாடெங்கும் பாதிரியார்களாக தேர்வாகியுள்ள கிருஸ்தவ பாதிரிமார்கள், சர்வ சமய நம்பிக்கைகள் குறித்து அறிந்து கொள்ள கோவையில் உள்ள வணக்கஸ்தலங்களுக்கு சென்று வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக இன்று (26 ஜூலை 2024) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாசலுக்கு வருகை தந்தனர்.



நிகழ்வின் ஆரம்பமாக ஜமாஅத் கோவை பெருநகரத் தலைவர் உமர் ஃபாரூக் அவர்கள் தலைமையுரையாற்றினார். தொடர்ந்து ஹுதா பள்ளிவாசல் இமாம் மௌலவி ரியாஸுதீன் அஸ்ஹரி அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.



நிகழ்வில் இஸ்லாம் குறித்து பல்வேறு கேள்விகளைக் கேட்டு தெளிவடைந்தனர். கேள்விகளுக்கு மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளியின் தலைமை இமாம் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் பதிலளித்தார்கள்.



இந்நிகழ்வில் ஜமாஅத் கோவை பெருநகரச் செயலாளர் சபீர் அலி, மக்கள் தொடர்புச் செயலாளர் அப்துல் ஹக்கீம், அமீரே மகாமிகள் பீர் முஹம்மது, முஹம்மது பஷீர் ஆகியோரும் கலந்து கொண்டு கலந்துரையாடினர்.



மேலும் ஜமாஅத்தின் ஊழியர்கள், உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...