அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் தாராபுரம் நஞ்சியம்பாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூர் மாவட்டம் நஞ்சியம்பாளையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையேற்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நஞ்சியம்பாளையம் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமை வகித்தார்.



இந்நிகழ்வில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி செந்தில்குமார், பொன்னாபுரம் வட்டார தலைமை மருத்துவர் டாக்டர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தனது உரையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். மகளிருக்கான இலவச பேருந்து சேவை, மாதாந்திர ஊக்கத்தொகை ரூ.1000, அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார். மேலும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



இந்த மருத்துவ முகாமில், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு மருந்து பெட்டகம், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன.



மேலும், அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில் நஞ்சியம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ரஜினிகாந்த், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...