கோவையில் டிஜிட்டல் டீடாக்ஸ் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான்

கோவையில் டிஜிட்டல் சாதனங்களின் அதீத பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3 கிலோமீட்டர் தூரம் வாக்கத்தான் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் இருந்து துவங்கி, ஆர்.எஸ்புரம் மற்றும் வடகோவை வழியாக 3 கிலோமீட்டர் தூரம் டிஜிட்டல் டீடாக்ஸ் (Digital Detox) குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.

இந்த வாக்கத்தானில் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் மொபைல் போன், டிவி, கம்ப்யூட்டர் போன்ற டிஜிட்டல் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த வாக்கத்தானின் நோக்கமாகும்.

தற்போது டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்துள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாகி விட்டனர். இதனால் பெரும் அளவில் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், டிஜிட்டல் சாதனங்களை நமது தேவைக்கேற்ப பயன்படுத்தாமல் அதிகளவில் பயன்படுத்துவதால் பல்வேறு மன உளைச்சல்கள் மற்றும் பிரச்சினைகளை இன்றைய தலைமுறையினர் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த விழிப்புணர்வு வாக்கத்தானில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்டோர் ஒரே மாதிரியான உடை அணிந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். டிஜிட்டல் சாதனங்களை அளவோடு பயன்படுத்தினால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...