மருத்துவர் பற்றாக்குறை: நவீன தொழில்நுட்பத்தின் தேவையை வலியுறுத்தும் டாடா குழும தலைவர்

கோவையில் நடைபெற்ற நிகழ்வில், டாடா குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் இந்தியாவின் மருத்துவர் பற்றாக்குறை மற்றும் சுகாதார சேவை சவால்கள் குறித்து பேசினார். நவீன தொழில்நுட்பத்தின் பங்கை வலியுறுத்தினார்.


Coimbatore: டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், கோவையில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி. கேன்சர் ஆராய்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வின் போது, இந்தியாவின் சுகாதாரத் துறையில் உள்ள சவால்கள் குறித்து அவர் விரிவாக பேசினார்.


நடராஜன் சந்திரசேகரன் கூறியதாவது: "இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. 1700 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் மிகவும் பின்தங்கிய நிலையைக் காட்டுகிறது. மேலும், மருத்துவர்கள் பெரும்பாலும் நகரப்பகுதிகளில் குவிந்துள்ளனர், ஆனால் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்."


"வடகிழக்கு மாநிலங்களில் அடிப்படை மருத்துவ சேவைகளைப் பெற மக்கள் 20 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நாட்டில் 5,00,000 மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தலையீடு மிகவும் அவசியமாகிறது," என்று அவர் வலியுறுத்தினார்.


மேலும், நவீன தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், "ஜப்பான் போன்ற நாடுகள் மூளை முடக்குவாதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் மூலம் வளமான வாழ்க்கையை வழங்க ஆய்வுகள் நடத்தி வருகின்றன," என்றார்.


சர்க்கரை நோய் பாதிப்பு குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். "2010-ல் 50 மில்லியனாக இருந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை, தற்போது 75 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது விரைவில் 100 மில்லியனை எட்டக்கூடும். எனவே, புதிய மருத்துவ முறைகள் அவசியம்," என்று அவர் கூறினார்.


"இந்தியாவில் பல்வேறு நோய்கள் காணப்படுவதால், புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகள் அதிகம். இந்த கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் பயனளிக்கும்," என்று நடராஜன் சந்திரசேகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...