மருத்துவர் பற்றாக்குறை: நவீன தொழில்நுட்பத்தின் தேவையை வலியுறுத்தும் டாடா குழும தலைவர்

கோவையில் நடைபெற்ற நிகழ்வில், டாடா குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் இந்தியாவின் மருத்துவர் பற்றாக்குறை மற்றும் சுகாதார சேவை சவால்கள் குறித்து பேசினார். நவீன தொழில்நுட்பத்தின் பங்கை வலியுறுத்தினார்.


Coimbatore: டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன், கோவையில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி. கேன்சர் ஆராய்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வின் போது, இந்தியாவின் சுகாதாரத் துறையில் உள்ள சவால்கள் குறித்து அவர் விரிவாக பேசினார்.


நடராஜன் சந்திரசேகரன் கூறியதாவது: "இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. 1700 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் மிகவும் பின்தங்கிய நிலையைக் காட்டுகிறது. மேலும், மருத்துவர்கள் பெரும்பாலும் நகரப்பகுதிகளில் குவிந்துள்ளனர், ஆனால் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்."


"வடகிழக்கு மாநிலங்களில் அடிப்படை மருத்துவ சேவைகளைப் பெற மக்கள் 20 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நாட்டில் 5,00,000 மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் தலையீடு மிகவும் அவசியமாகிறது," என்று அவர் வலியுறுத்தினார்.


மேலும், நவீன தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், "ஜப்பான் போன்ற நாடுகள் மூளை முடக்குவாதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் மூலம் வளமான வாழ்க்கையை வழங்க ஆய்வுகள் நடத்தி வருகின்றன," என்றார்.


சர்க்கரை நோய் பாதிப்பு குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். "2010-ல் 50 மில்லியனாக இருந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை, தற்போது 75 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது விரைவில் 100 மில்லியனை எட்டக்கூடும். எனவே, புதிய மருத்துவ முறைகள் அவசியம்," என்று அவர் கூறினார்.


"இந்தியாவில் பல்வேறு நோய்கள் காணப்படுவதால், புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகள் அதிகம். இந்த கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் பயனளிக்கும்," என்று நடராஜன் சந்திரசேகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...