உடுமலையில் அன்பு பாலம் அமைப்பின் 4வது ஆண்டு இலவச பொருட்கள் விநியோகம்

உடுமலையில் அபெக்ஸ் கிளப்பின் அன்பு பாலம் அமைப்பு 4வது ஆண்டாக ஏழை எளிய மக்களுக்கு இலவச பொருட்கள் விநியோகம் செய்தது. சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ராம அய்யர் திருமண மண்டபத்தில் அபெக்ஸ் கிளப்பின் அன்பு பாலம் அமைப்பு சார்பில் 4வது ஆண்டாக இலவச பொருட்கள் விநியோகத் திட்டம் நேற்று காலை தொடங்கியது.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நல்ல நிலையில் உள்ள ஆடைகள், புத்தகங்கள், பள்ளி பைகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் மண்டபத்தில் குவிக்கப்பட்டன. சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மண்டபத்திற்கு வருகை தந்து தங்களுக்கு தேவையான உடைகள் மற்றும் மாணவர்களுக்கான புத்தகங்களை இலவசமாக பெற்றுச் சென்றனர்.



இந்த நிகழ்வில் அபெக்ஸ் தேசிய தலைவர் பிரசாத், மாவட்ட ஆளுநர் ஜெயபால் மற்றும் தேசிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உடுமலை அபெக்ஸ் தங்கத் தலைவர் கோவிந்தராஜன், உப தலைவர் சந்திரன், செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் மவுன குருசாமி மற்றும் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ராம அய்யர் மண்டப அறக்கட்டளையின் சுப்புராமன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...