பொள்ளாச்சியில் லாரி மோதி இரு இளைஞர்கள் பரிதாப உயிரிழப்பு

பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின் நகர் பகுதியில் நேற்று மாலை பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து நடந்த நேரத்தில், அரசு பேருந்து ஒன்று பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்தது. பேருந்து நின்று கொண்டிருந்ததால், பேருந்தின் பின்புறமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பேருந்தை முந்தி செல்ல முயன்றனர். அப்போது பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். லாரியின் சக்கரங்கள் இருவர் மீதும் ஏறியதில் அவர்களின் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



உயிரிழந்த இருவரும் பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிபட்டியைச் சேர்ந்த கவி பிரகாஷ் (வயது 20) மற்றும் ஜெயபிரகாஷ் (வயது 24) என்பது தெரிய வந்தது. இருவரும் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் இந்த பரிதாப விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்த போலீசார், விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...