சேலத்தில் ஆகஸ்ட் 16ஆம் தேதி எம்.பி.சி. உரிமை மீட்பு மாநாடு: 24 மணை தெலுங்கு செட்டியார் பேரவை தலைவர் அறிவிப்பு

பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 24 மணை தெலுங்கு செட்டியார் பேரவை மாநில தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, ஆகஸ்ட் 16ஆம் தேதி சேலத்தில் எம்.பி.சி. உரிமை மீட்பு மாநாடு நடைபெறும் என அறிவித்தார்.


Coimbatore: 24 மணை தெலுங்கு செட்டியார் பேரவை சார்பில் வருகிற ஆகஸ்ட் 16ஆம் தேதி சேலத்தில் எம்.பி.சி. உரிமை மீட்பு மாநாடு நடத்தப்படுவதாக அப்பேரவையின் மாநில தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்தக் கூட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளைச் சேர்ந்த நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



செய்தியாளர்களிடம் பேசிய ஜெகநாத் மிஸ்ரா, "சேலத்தில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்," என்று தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டிற்கு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாநாடு 24 மணை தெலுங்கு செட்டியாருக்கு எம்.பி.சி உரிமை மீட்பு மாநாடாக நடத்தப்படுவதாகவும் ஜெகநாத் மிஸ்ரா உறுதிபடக் கூறினார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...