கோவையில் புதிய கிளையை துவக்கியது ஏபிசி கிளினிக் - பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே துவக்கி வைத்தார்.


ஆண், பெண் என இருபாலருக்கும் அழகுபடுத்திக் கொள்ளும் சிகிச்சை அளிக்கும் அதிநவீன கிளினிக்கின் எட்டாவது கிளையாக கோயம்புத்துாரில் துவக்கப்பட்டுள்ளது. இதனை பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். 



அடுத்த 15-18 மாதங்களில் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 50 கிளினிக்குகளை துவக்க வேண்டும் என்ற விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக இங்கு துவக்கப்பட்டுள்ளது.



இது குறித்து ஏபிசி கிளினிக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான திருமல் ராஜ், கூறுகையில்; “சென்னையில் மற்றுமொரு கிளையோடு, கோவையில் 8வது கிளையை துவக்குவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். பெங்களுரு, ஐதராபாத், மற்றும் புனே உள்ளிட்ட மேலும் 15 இடங்களில் துவக்க ஒப்பந்தம் செய்துள்ளோம். இவை அனைத்தும் அடுத்தடுத்த மாதங்களில் துவக்க உள்ளோம். இந்தியா முழுவதும் அழகு சிகிச்சைக்கு நல்ல தேவைகள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு நகரிலும் சர்வதேச தரம் வாய்ந்த சேவையை எளிதாக கிடைக்கச் செய்வோம்.



ஏபிசி கிளினிக் துவக்கப்பட்ட 2015ம் ஆண்டிலிருந்து அதிநவீன தொழில்நுட்பங்களை கிளினிக்குகளில் அறிமுகம் செய்து வருகிறது. இதன் முக்கிய அம்சமே அதிநவீன அடிப்படை கட்டமைப்பு வசதியில், பயிற்சி பெற்ற அறுவை சிகிச்சையாளர்கள் தான். இந்தியாவில் துவக்கப்பட்ட முதலாம் ஆண்டிலேயே வேகமான விற்பனையை பெற்றது. ஏபிசி கிளினிக் பெங்களுரு, புனே மற்றும் ஐதராபாத் நகரங்களில் வணிக வாய்ப்புகளை துவக்கியுள்ளது. பிற நகரங்களிலும் இந்த வாய்ப்புகளை ஏற்படுத்த உள்ளது.

அழகு பெற அறுவை சிகிச்சை பெறும் வாடிக்கையாளர்களுக்கு நிதியுதவியும் அளிக்க வங்கி சாரா நிதி நிறுவனங்களுடனும் ஏபிசி கிளினிக் பங்குதாராக உள்ளது. பங்குதாரர்களுக்கு தொடர்ந்து அதிநவீன பயிற்சிகளை ஏபிசி கிளினிக் சர்வதேச அளவிலான அழகுதுறை டாக்டர்களைக் கொண்டு  அளித்து வருகிறது என்கிறார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...