மீன் பிடிக்க அனுமதி கோரி வலைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மீனவர்கள்

கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட குளங்களில் மீன்பிடிக்க அனுமதி வழங்கக் கோரி உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் பகுதி மீனவர்கள் வலைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


Coimbatore: கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட குளங்களில் மீன்பிடிக்க அனுமதி வழங்கக் கோரி உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வலைகளுடன் கோவை மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவர்களிடம் மனு அளிக்க வந்தனர்.

மீனவர்கள் தங்கள் மனுவில், பல ஆண்டுகளாக கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தில் மீனவர்களாக மீன்பிடித்து வருவதாகவும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மீன் பாசி குத்தகை உரிமம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். குத்தகை உரிமை முடிந்தவுடன் அனைத்து மீனவர்களும் சங்கத்திற்கு உட்பட்ட அனைத்து குளங்களிலும் மீன் பிடித்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.



தற்போதைய கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் பாலமுருகன், சில மீனவர்களுடன் சேர்ந்து கொண்டு குறிப்பிட்ட சில குளங்களில் மீன்பிடிக்க அனுமதி தர மறுப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்தக் குளங்களில் மீன்பிடிக்க சென்றால் பாலமுருகன் தங்களை அச்சுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக பெரும்பான்மையான மீனவக் குடும்பங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட அனைத்து குளங்களிலும் கோவை வட்ட மீனவர் சங்க உறுப்பினர்கள் மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மீனவர்கள் தங்கள் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...