கோவை மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்த சஹாரா சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம்: 200 கோடி மதிப்புள்ள 10.5 ஏக்கர் நிலம் மீட்பு

கோவை சரவணம்பட்டியில் சஹாரா சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் மாநகராட்சிக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்தது கண்டுபிடிப்பு. 200 கோடி மதிப்புள்ள நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.


Coimbatore: கோவை மாநகராட்சிக்கு சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்த தனியார் நிறுவனத்திடமிருந்து மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் சஹாரா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற தனியார் நிறுவனம் வீட்டுமனைகளை அமைத்துள்ளது. 2009ஆம் ஆண்டு பேரூராட்சியாக இருந்த காலத்தில், 109 ஏக்கர் பரப்பளவில் வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டன. இதில் ஓபன் ஸ்பேஸ் ரிசர்வ் (OSR) என்ற வகையில் 10.5 ஏக்கர் நிலம் மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது.



பின்னர் இப்பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, நான்காவது வார்டாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சரவணம்பட்டி பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, மாநகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட நிலத்தை சஹாரா சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் ஆக்கிரமித்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் மற்றும் 4வது வார்டு மாமன்ற உறுப்பினர் கதிர்வேலுசாமி ஆகியோர் முறைகேடான ஆக்கிரமிப்பு தொடர்பான ஆவணங்களை சேகரித்து உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



அதன் அடிப்படையில், சஹாரா சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த 200 கோடி ரூபாய் மதிப்புள்ள 10.5 ஏக்கர் நிலம் இன்று மீட்கப்பட்டது. நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த உடைமைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி வடக்கு மண்டல உதவி நகர அமைப்பு அலுவலர் சத்தியா உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...