உடுமலையில் சர்வதேச உலகப் புலிகள் தினம்: புலி வேடமிட்டு மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

உடுமலையில் சர்வதேச உலகப் புலிகள் தினத்தை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புலி வேடமிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சர்வதேச உலகப் புலிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நேதாஜி விளையாட்டு மைதானத்தில் துவங்கிய இந்த ஊர்வலம், உடுமலை வனச்சரக அலுவலகத்தில் நிறைவடைந்தது.

திருப்பூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். அவர் புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார். ஊர்வலம் ராஜேந்திர ரோடு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தளி ரோடு வழியாக சென்றது.



ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள் புலி வேடம் அணிந்து நடனமாடினர். சிலர் புலியின் முகமூடிகள் அணிந்து கொண்டனர். மாணவர்கள் பொதுமக்களுக்கு புலியின் பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தியவாறு சென்றனர்.



இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் உடுமலை வனச்சரகர் மணிகண்டன், அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு புலிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...