உடுமலையில் தோட்டக்கலைத்துறை கருத்தரங்கிற்கு எதிர்ப்பு: விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

உடுமலையில் தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் மானியத் திட்டங்களின் தாமதம் குறித்து விவசாயிகள் கோபம் தெரிவித்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தோட்டக்கலைத்துறை சார்பில் இரண்டு நாள் மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். கடந்த சில மாதங்களாக தோட்டக்கலைத்துறையின் செயல்பாடுகளால் விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும், தமிழக அரசின் மானியத் திட்டங்கள் குறித்த தகவல்கள் உரிய நேரத்தில் விவசாயிகளை சென்றடையவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.



பயிர்கள் சேதமடைந்தால் இழப்பீடு வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாகவும், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் தென்னை வாடல் நோய் அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இந்நோயைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

மேலும், விவசாயிகள் பயிர் பாதிப்பு குறித்து புகார் அளித்தால், அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வதில்லை என்றும் கூறினர். எனவே, விவசாயிகள் பாதிப்பு குறித்து தெரிவித்தால், தோட்டக்கலை அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

உடுமலையில் நடைபெற்ற தோட்டக்கலைத்துறை கருத்தரங்கிற்கு எதிராக விவசாயிகள் நடத்திய இந்த போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...