உடுமலையில் மின் கட்டண உயர்வு மற்றும் மின்சார திருத்த சட்டத்திற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மின் கட்டண உயர்வு, மின்சார திருத்த சட்டம் மற்றும் உதய் மின் திட்டத்திற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின்வினியோகத்தை தனியாருக்கு தாரை வாக்கும் நோக்கில் உள்ள மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மாநில உரிமைகளை பறிக்கும் உதய் மின் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகா செயலாளர் சௌந்தரராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் K.M. இசாக், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சுப்பிரமணியம், தாலுக்கா துணை செயலாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாவட்ட குழு உறுப்பினர்களான ரணதேவ், ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...