கோவையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 26 வயது இளைஞர் கைது

கோவையில் 28 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். பெண் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை அருகே உள்ள குனியமுத்தூர் பாலக்காடு மெயின் ரோட்டில் வசிக்கும் 28 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண் ஏற்கனவே திருமணமானவர். ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உக்கடம் வின்சென்ட் ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், 26 வயதான இளைஞருடன் நட்பு ஏற்பட்டது. பெண் அவரை தோழராக பழகினாலும், இளைஞர் அதை தவறாக பயன்படுத்தி நடந்து கொண்டதாக தெரிகிறது.

இதனால் வருத்தமடைந்த பெண், அவரை விட்டு விலகிச் சென்றார். ஆனால் இளைஞர் தொடர்ந்து அவரை தொலைபேசியில் அழைத்து, தன்னுடன் இருக்குமாறு வற்புறுத்தியுள்ளார். சம்பவத்தன்று, பெண் தனது தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, இளைஞர் அங்கு சென்று அவரது கன்னத்தில் அறைந்து மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து பெண் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான காவல்துறையினர், இளைஞர் மீது பெண்ணை அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்து தொந்தரவு செய்ததாக பெண் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, ஜூலை 28 ஆம் தேதி இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...