தாராபுரம் அருகே ரூ.8 லட்சம் மதிப்பிலான புதிய சமையல் கூடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் அடுத்த சேடபாளையம் அரசு மாதிரி பள்ளியில் ரூ.8 லட்சம் மதிப்பிலான புதிய சமையல் கூடத்தை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பல்வேறு அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் அடுத்துள்ள சேடபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.

இந்த அரசு மாதிரி பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதுவரை சமையல் கூடம் இல்லாமல் இருந்த இந்தப் பள்ளிக்கு, தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமையல் கூடம் கட்டப்பட்டது.



அமைச்சர் கயல்விழி செல்வராஜ் புதிய சமையல் கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார். அதன் பின்னர், புதிதாக கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு அறையையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில் ருத்ராவதி பேரூர் கழக செயலாளர் அன்பரசு முன்னிலை வகித்தார்.

இந்த திறப்பு விழாவில் பேரூராட்சி கவுன்சிலர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் தங்கவேல், நந்தகோபால், வார்டு பிரதிநிதி ரமேஷ், ராமகிருஷ்ணன், இளைஞர் அணி கனகசபாபதி, விஸ்வநாதன், கோகுலகிருஷ்ணன், கார்த்திக், செல்வகுமார் மற்றும் அரசு மாதிரி பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...