வால்பாறையில் கனமழை: மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்பின் மீது விழுந்ததில் பாட்டி-பேத்தி பரிதாப உயிரிழப்பு

வால்பாறை சோலையார் அணைப்பகுதியில் கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு, குடியிருப்பின் மீது விழுந்ததில் பாட்டி-பேத்தி உயிரிழந்தனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சோலையார் அணைப்பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவில் பாட்டி-பேத்தி பரிதாபமாக உயிரிழந்தனர்.

வால்பாறை அருகே உள்ள சோலையார் அணைப்பகுதியில் 'இடது கரை' என்ற இடத்தில் ராஜேஸ்வரி (வயது 42) மற்றும் அவரது பேத்தி ஜனனபிரியா (வயது 14) ஆகியோர் தங்களது குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு பெய்த கனமழையால் அருகில் இருந்த மண் குன்று இடிந்து குடியிருப்பின் மீது விழுந்தது.



இந்த சம்பவத்தில் குடியிருப்பு சேதமடைந்ததோடு, தூங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி மற்றும் ஜனனபிரியா மீது கற்கள் விழுந்து இருவரும் உயிரிழந்தனர். காலையில் அருகில் உள்ளவர்கள் இதனை கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும் பொதுமக்களும் இணைந்து கற்களை அகற்றி இருவரின் உடல்களையும் மீட்டனர்.

மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...