தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.3000 கோடி நிதி கோரி பிரதமருக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம்

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.3000 கோடி நிதி கோரி பிரதமருக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டத்தை தொடங்கியது. 1000 தபால் அட்டைகள் அனுப்பப்பட்டன.


Coimbatore: கோவையில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்கக் கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.3000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமருக்கு 10,000 தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டத்தை மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், பொதுமக்களுக்கும் பேருந்து பயணிகளுக்கும் இது குறித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.



அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள தபால் நிலையத்திலிருந்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற 1000 தபால் அட்டைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈசுவரன் கூறுகையில், "கடந்த பத்து ஆண்டுகளில், மொழிகளின் வளர்ச்சிக்காக இந்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதியில், 25 ஆயிரம் பேர் மட்டுமே தாய் மொழியாக கொண்ட சமஸ்கிருதத்திற்கு 61% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் புறக்கணித்துவிட்டு, அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவை சமஸ்கிருத நாடாக மாற்றும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்," என்றார்.



"அடுத்த ஐந்தாண்டுகளில் சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட தமிழ் மொழிக்கு அதிகமான நிதி ஒதுக்கி தமிழ் மொழியை உலகம் எங்கும் எடுத்துச் செல்ல வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

அனைத்து கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களிடத்திலும் கையெழுத்து பெற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்ந்து தபால் அட்டைகளை அனுப்பவுள்ளதாகவும் ஈசுவரன் தெரிவித்தார்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...