உடுமலை அருகே கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முயற்சி - பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முயற்சித்தனர். முறைகேடு புகார்களை அடுத்து நடந்த இந்த போராட்டத்தால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணியூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் நிலைமை கட்டுக்குள் இருந்தது.

கணியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெறுவதாகவும், சார்பதிவாளர் தாமோதரன் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, துங்காவி கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் குடும்பத்தினரின் 10 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக சார்பதிவாளரை கண்டித்து ஜூலை 5ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, சார்பதிவாளர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்ட அதிகாரிகள், கணியூர் சார்பதிவாளர் தாமோதரன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, முற்றுகை போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த சம்பவத்தால் உடுமலை அருகே கணியூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...