பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் பாதுகாப்பு பணி தீவிரம்

பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் காவல்துறை மற்றும் பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நேற்றிரவு 9 மணியளவில் அதன் முழு கொள்ளளவான 100 அடியை எட்டி நிரம்பியது. ஜூன், ஜூலை மாதங்களில் தொடர்ந்து நான்காவது முறையாக அணை நிரம்பி உள்ளது.



பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி அதன் நீர்வரத்து அப்படியே உபரி நீராக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.



இதனால் பவானிக் கரையோர பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.



ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசலில் பயணிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.



பவானி ஆற்றின் கரையில் அமைந்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று ஜூலை 30 ஆம் தேதி ஆடிக்குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து உள்ளனர்.

பவானி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்க கூடாது என எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டு கோவிலின் படித்துறை மற்றும் கரையோர பகுதிகளை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் அசம்பாவிதங்களை தடுக்க மாநில பேரிடர் மீட்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...