கோவை சுங்கம் பைபாஸில் குடிபோதையில் போலீசாருடன் தகராறு செய்த லாரி ஓட்டுநர் கைது

கோவை சுங்கம் பைபாஸில் போலீஸ் வாகன சோதனையின் போது, குடிபோதையில் வந்த லாரி ஓட்டுநர் முகமது நஸ்ருதீன் போலீசாருடன் தகராறு செய்ததால் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் ஜூலை 29 அன்று நடந்தது.


கோவை: கோவை உக்கடம் போலீசார் சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகம் அருகே ஜூலை 29 அன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி, அவர்களது ஆவணங்களை சரிபார்த்தனர்.

இந்நிலையில், உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது நஸ்ருதீன் (24) என்ற லாரி ஓட்டுநரை போலீசார் சோதனை செய்தபோது, அவர் மது அருந்தியிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த முகமது நஸ்ருதீன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவகுமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார். இது தொடர்பாக தேவகுமார் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், தண்ணீர் லாரி ஓட்டுநரான முகமது நஸ்ருதீன் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...