தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலம்பட்டி பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


Coimbatore: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று கொங்கு மண்டலத்தில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.



அதன்படி, திமுக சார்பில் உடுமலை தொகுதியில் போட்டியிடும் ஜெயகுமார், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் நித்தியானந்தன், வால்பாறை தொகுதியில் போட்டியிடும் சுதாகர் ஆகியோருக்கு ஆதரவாக, பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலம்பட்டி பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய அவர், தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் டெல்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் இடையிலான போட்டி என்றும், இதில் தமிழ்நாடு அணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.



மேலும், தமிழக மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத்தொகையை முடக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் ரூ.5,000 தொகையை வங்கி கணக்குகளில் வரவு வைத்ததாகவும் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவிற்கு முழுமையாக அடிமையாக மாறிவிட்டார் என்றும், “பத்து தோல்வி பழனிச்சாமி” என்று அழைக்கப்படுபவர், இந்த தேர்தலுக்கு பிறகு “மொத்த தோல்வி பழனிச்சாமி” ஆக மாறுவார் என்றும் விமர்சித்தார்.



தொடர்ந்து மக்கள் நலத் திட்டங்கள் கிடைக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...