தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலம்பட்டி பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


Coimbatore: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று கொங்கு மண்டலத்தில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.



அதன்படி, திமுக சார்பில் உடுமலை தொகுதியில் போட்டியிடும் ஜெயகுமார், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் நித்தியானந்தன், வால்பாறை தொகுதியில் போட்டியிடும் சுதாகர் ஆகியோருக்கு ஆதரவாக, பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலம்பட்டி பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.



அப்போது பேசிய அவர், தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் டெல்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் இடையிலான போட்டி என்றும், இதில் தமிழ்நாடு அணி நிச்சயம் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.



மேலும், தமிழக மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத்தொகையை முடக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் ரூ.5,000 தொகையை வங்கி கணக்குகளில் வரவு வைத்ததாகவும் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவிற்கு முழுமையாக அடிமையாக மாறிவிட்டார் என்றும், “பத்து தோல்வி பழனிச்சாமி” என்று அழைக்கப்படுபவர், இந்த தேர்தலுக்கு பிறகு “மொத்த தோல்வி பழனிச்சாமி” ஆக மாறுவார் என்றும் விமர்சித்தார்.



தொடர்ந்து மக்கள் நலத் திட்டங்கள் கிடைக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...