கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரும்பிகள் கோழி இறைச்சிக்கு பதிலாக கடல் மீன்களை வாங்குவதால் விற்பனை உயர்வு காணப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது.
Coimbatore: கோவையில் கடும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை களைகட்டி வருகிறது. வெயில் காலத்தில் அசைவ உணவு விரும்பிகள் கோழி இறைச்சிக்கு பதிலாக கடல் மீன்களை விரும்பி வாங்குவதால், கடந்த சில வாரங்களாக மீன் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.
கோவை உக்கடத்தில் உள்ள ஒருங்கிணைந்த மீன் சந்தைக்கு ராமேசுவரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் புதிய கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. பிப்ரவரி மாத இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் தொடங்கிய பின்னர், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
வெயில் காலத்தில் மக்கள் கோழி இறைச்சியை விட கடல் மீன்களை அதிகம் விரும்புவதால், மீன் சந்தையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மீன் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு வகையான கடல் மீன்களை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மத்தி மீன் கிலோ ரூ.120, அயிரை மீன் ரூ.100, இறால் ரூ.350, வஞ்சிரம் ரூ.250, சங்கரா மீன் ரூ.200, வாவல் மீன் ரூ.250, பாறை மீன் ரூ.200, செம்மீன் ரூ.400, நண்டு ரூ.200 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இறால் மற்றும் செம்மீன் வகைகளுக்கு அதிக கிராக்கி இருந்ததாக மீன் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
வெயில் காலத்தில் கடல் மீன் உணவு ஆரோக்கியமானதாகவும், உடலுக்கு குளிர்ச்சி தருவதாகவும் மக்கள் கருதுவதால் விற்பனை அதிகரித்துள்ளது. வாரம் முழுவதும் மீன் விற்பனை நன்றாக இருந்தாலும், வார இறுதி நாட்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரிக்கிறது என்று சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோவை உக்கடத்தில் உள்ள ஒருங்கிணைந்த மீன் சந்தைக்கு ராமேசுவரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் புதிய கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. பிப்ரவரி மாத இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் தொடங்கிய பின்னர், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
வெயில் காலத்தில் மக்கள் கோழி இறைச்சியை விட கடல் மீன்களை அதிகம் விரும்புவதால், மீன் சந்தையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மீன் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு வகையான கடல் மீன்களை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மத்தி மீன் கிலோ ரூ.120, அயிரை மீன் ரூ.100, இறால் ரூ.350, வஞ்சிரம் ரூ.250, சங்கரா மீன் ரூ.200, வாவல் மீன் ரூ.250, பாறை மீன் ரூ.200, செம்மீன் ரூ.400, நண்டு ரூ.200 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இறால் மற்றும் செம்மீன் வகைகளுக்கு அதிக கிராக்கி இருந்ததாக மீன் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
வெயில் காலத்தில் கடல் மீன் உணவு ஆரோக்கியமானதாகவும், உடலுக்கு குளிர்ச்சி தருவதாகவும் மக்கள் கருதுவதால் விற்பனை அதிகரித்துள்ளது. வாரம் முழுவதும் மீன் விற்பனை நன்றாக இருந்தாலும், வார இறுதி நாட்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரிக்கிறது என்று சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.