நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணைகளில் இருந்து குறிப்பிடத்தக்க அளவில் நீர் வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Coimbatore: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ள முக்கிய அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 27ஆம் தேதி நிலவரப்படி பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் வெளியேற்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.



ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணை 120 அடி முழு கொள்ளளவு கொண்டது. தற்போது இந்த அணையின் நீர்மட்டம் 67.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 190 கன அடி நீர் வரத்து இருக்கும் நிலையில், வினாடிக்கு 368 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை நீரின் வரத்தால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.



பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் தற்போது அணையின் நீர்மட்டம் 39.78 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 80 கன அடி நீர் வரத்து இருக்கும் நிலையில், வினாடிக்கு 1100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



வால்பாறை பகுதியில் அமைந்துள்ள சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் தற்போதைய நீர்மட்டம் 8.61 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 25 கன அடி நீர் வரத்து இருக்கும் நிலையில், வினாடிக்கு 5 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து ஏற்பட்டு வருவதால் தற்போது நீர்மட்டம் 21.36 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணையில் இருந்து வினாடிக்கு 15 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது இந்த அணையின் நீர்மட்டம் 34.14 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 759 கன அடி நீர் வரத்து இருக்கும் நிலையில், வினாடிக்கு 918 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து கிடைக்கும் நீர் வரத்தால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, தேவைக்கேற்ப நீர் வெளியேற்றத்தை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீர் வெளியேற்றம் தொடர்பான அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...