தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்து வெளியேறிய காட்டு யானை

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே முத்திபாளையத்தில் காட்டு யானை ஒன்று வீட்டின் கேட்டை உடைத்து, காம்பவுண்ட் சுவரை இடித்து வெளியேறியது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.



Coimbatore: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள முத்திபாளையம் பகுதியில் காட்டு யானை ஒன்று வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, தொண்டாமுத்தூர், மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொண்டாமுத்தூர் பகுதியில் சுற்றிவரும் ஒற்றைக் காட்டு யானையால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்பு தொண்டாமுத்தூர் அருகே கோவில் பூசாரி ஒருவரை காட்டு யானை தாக்கியதில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டன. மேலும், அதே பகுதியில் யானையை விரட்ட முயன்ற இளைஞர் ஒருவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.



இந்நிலையில், ஜூலை 30 அன்று இரவு முத்திபாளையம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று ஊரைச் சுற்றி உலா வந்தது. அப்போது ஒரு வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த அந்த யானை, வீட்டின் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி செல்ல முயன்றபோது, காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது.

இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். தற்போது அந்தக் காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறை அதிகாரிகள் காட்டு யானையை கண்காணித்து வருவதாகவும், அதனை அதன் வாழ்விடத்திற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், யானைகளை பார்த்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...