கோவை வனக்கல்லூரியில் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு கருத்தரங்கம்

கோவை வனக்கல்லூரியில் ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இந்திய-ஜப்பானிய கூட்டுறவு, வனத்துறை முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.


Coimbatore: கோவை வனக்கல்லூரி வளாகத்தில், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் ஜூலை 30 ஆம் தேதி தொடங்கியது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக புது தில்லியில் உள்ள ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் இந்திய அலுவலக மேம்பாட்டுப் பிரிவு நிபுணர் சித்தார்த் பரமேஸ்வரன் பங்கேற்றார்.


சித்தார்த் பரமேஸ்வரன் தனது உரையில், தமிழகத்தில் காடுகள் வளர்ப்புத் திட்டம், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை திட்டங்களுக்காக ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நான்கு கட்டங்களாக நிதியுதவி செய்து வருவதாகக் கூறினார். மேலும், தனியார் நிலங்களில் சுமார் 1.43 லட்சம் ஹெக்டேரில் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 87 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அறிவியல் ஆராய்ச்சியில் இந்திய-ஜப்பானிய ஆராய்ச்சி மையங்கள் இணைந்து செயல்படுவது இரு நாட்டு உறவில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


தமிழக அரசின் வனத்துறை செயலர் செந்தில்குமார், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்தும், வனத்துறையின் பல்வேறு பயன்பாடுகளுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருவதைக் குறித்தும் விளக்கினார்.


மனித-விலங்கு மோதல் குறித்த ஆய்வு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கோர் எர்த் டிரஸ்ட் அமைப்பின் கள அலுவலர் தானீஷ் பாஸ்கர் உரையாற்றினார். இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீதர் விஜய்கிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் நிஷாந்த் சீனிவாசன் ஆகியோர் பல்வேறு மனித-விலங்கு மோதல்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து பேசினர்.


இக்கருத்தரங்கில், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் முதுநிலை நிர்வாகி வகாமட்சு இஜி, தமிழக வனத்துறை முதன்மை தலைமை வனக் காப்பாளர் ஸ்ரீனிவாச ரெட்டி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனத்துறை சிறப்பு படைப் பிரிவு) சுதான்சு குப்தா, கோவை மண்டல வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.


தமிழக பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை காலநிலை மாற்ற இயக்கத்தின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அன்வர்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்தக் கருத்தரங்கம் ஜூலை 31 ஆம் தேதி நிறைவடைந்தது.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...