கோவையில் ரூ.3 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு இடம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு

கோவை மாநகராட்சி 51வது வார்டில் உள்ள கிருஷ்ணா நகரில் 16 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டது. இந்த இடம் 2007ல் தனிநபருக்கு விற்கப்பட்டிருந்தது.


Coimbatore: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 51வது வார்டில் உள்ள கிருஷ்ணா நகரில் ரூ.3 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு இடம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது.

1980ஆம் ஆண்டு 7 ஏக்கர் பரப்பளவில் 100 மனைகளாக பிரிக்கப்பட்ட கிருஷ்ணா நகரில், 16 சென்ட் நிலம் பொது ஒதுக்கீட்டு இடமாக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், 2007ஆம் ஆண்டு இந்த இடம் வரன்முறை செய்யப்பட்டு தனிநபருக்கு விற்கப்பட்டது. அப்போது அந்த இடத்தில் இருந்த கிணறும் மூடப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து 2019ஆம் ஆண்டு சமூக செயல்பாட்டாளர் தியாகராஜன் மாநகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் புகார் அளித்தார். இதையடுத்து, ஆக்கிரமிப்புதாரருக்கு மூன்று முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும், அவர் நேரடி விசாரணைக்கு வரவில்லை.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் M. சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில், உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான குழு ஆகஸ்ட் 1ஆம் தேதி கிருஷ்ணா நகர் பகுதிக்குச் சென்று, பொது ஒதுக்கீட்டு இடத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த இடத்தில் இருந்த இரும்புத் தகடுகள் மற்றும் முட்புதர்கள் அகற்றப்பட்டன. பின்னர், "இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஒதுக்கீட்டு இடம்" என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. தற்போது இந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...