கோவை வ.உ.சி மைதானத்தில் வாகா எல்லை அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சி: போலீசார் தீவிர பயிற்சி

கோவை வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தின விழாவில் வாகா எல்லை அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக ஆயுதப்படை போலீசார் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவையில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் வ.உ.சி மைதானத்தில் முதன் முறையாக வாகா எல்லையில் நடைபெறும் அணிவகுப்பை போன்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



வாகா எல்லையில் இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டு இராணுவத்தினரின் அணிவகுப்பு நடைபெறும். இந்த அணிவகுப்பு உணர்ச்சி பூர்வமிக்க நிகழ்ச்சியாக இருக்கும். அதே போன்ற அணிவகுப்பை கோவையில் நடத்த ஆயுதப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.



இந்த நிகழ்ச்சிக்கான தீவிர பயிற்சியில் கோவை மாநகர ஆயுதப்படை போலீசார் தற்போது ஆகஸ்ட் 2 முதல் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு வாகா எல்லையில் பயிற்சி பெற்ற கமாண்டோ அதிகாரிகள் பயிற்சி அளித்து வருகின்றனர்.



பொதுமக்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தால் இந்த சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சியை நேரில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...